- Advertisement -
டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்க உள்ளார். இதைக் குடியரசுத் தலைவர் தான் திறக்க வேண்டும் என 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசைக் கண்டித்து, இவ்விழாவைப் புறக்கணித்து உள்ளது. அதன்படி, திமுக அரசும் இவ்விழாவில் கலந்து கொள்ளாது என அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடக்கும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவில் பாமக கலந்து கொள்ளும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஏனென்றால், இந்த விழா வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும், அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பாமக பங்கேற்கிறது என்றார்.
- Advertisement -