தமிழாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு முறை பயணமாகச் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவர் கடந்த மே 23க்கு சிங்கப்பூர் சென்று பல தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளார். பின்னர் நேற்று (மே 25) இரவு சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் சென்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், இன்று (மே 26) ஜப்பானின் டைசல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், அங்குள்ள ஓசாகா மாகாணத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயற்சியின் முதல் படியாக ஜப்பான் முதலீட்டாளர்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது என்றார். தமிழகத்தில் உணவுப் பூங்கா, மருத்துவ சாதனப்பூங்கா உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.