பொதுவாகக் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்குத் தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு. உங்கள் வீட்டில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பு அறையில் வைக்கலாம். இதனால் கண் திருஷ்டி நீங்கும். அதைப்போல், தொட்டியில் கருப்பு,சிகப்பு மீன்களை வளர்க்கலாம், கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம்.
மேலும், உங்கள் வீட்டில் இந்த வாத்திய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம், வாசலில் கற்றாழை, சப்பாத்திக் கள்ளி,மஞ்சள் ரோஜா வளர்க்கலாம். அதைப்போல், இந்த ஆகாச கருடன் என்ற கிழங்கை மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம். மேலும், இந்த எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமம், மற்றொரு பகுதியில் மஞ்சள் தடவியும் வைக்கலாம். இருவேளைச் சாம்பிராணி பொடியுடன், கருவேலம் பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் கலந்து தூப, தீப, புகை காட்டலாம். இதை வாரம் ஒரு முறை கல் உப்பைக் குளிக்கும் நேரில் கலந்து குளிக்கலாம்.