பாகிஸ்தானில் கடந்த மே 9 ஆம் தேதியில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல ஊழல் வழக்குகளில் ஜாமீன் கோரி ஆஜரானார். ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக ராணுவப் படை வரை கைது செய்தது. இதனால், இம்ரான் கான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் முழுவதும் வன்முறைச் சம்பவம் நிகழ்த்தினர். பின்னர் நீதிமன்றம் இவரை ஜாமீனில் விடுவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி உள்ளிட்ட 80 பேர் தற்போது பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. ஏனென்றால், இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நடந்த வன்முறை தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பித்து உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இம்ரான்கான் உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதைத் தடுக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.