- Advertisement -
கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி மீது சில நாட்களுக்கு முன் இதுதொடர்பான வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து,இன்று (மே 26) இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட இவ்வழக்கில் விசாரணை அறிக்கையைச் சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. அந்த விசாரணை அறிக்கையில், எடப்பாடி பழனிசாமி தெரிவித்த சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறது.
- Advertisement -