ஒருவர் விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு. இது குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். இதனால் நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.
பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெற்றது. அதே போல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது.இது உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது, சளியை விரட்டும் சக்தியும் மிளகுக்கு உள்ளது. இந்த மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஒருங்கே உடலில் சேரும் போது, இருமல், சளி சரியாகி விடும்.