- Advertisement -
பொதுவாக வெள்ளிக் கிழமை சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தது. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சுக்கிர தசை – புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்றதால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும்.
அதைப்போல், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும், வீட்டில் சுபிட்சம் நிலவும்,குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும், மேலும் சுப பலன்கள் அதிகமாக, வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்கின்றனர்.
- Advertisement -