அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொறியியல் படிப்புகளைத் தமிழ் வழியாகப் படிக்க வேண்டும் எனக் கருத்தில் கொண்டு, சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் மாணவர்கள் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தமிழ் வழி பொறியியல் படிப்பு படிக்க போதிய மாணவர்கள் சேர்த்ததால், இந்த 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், 6 உறுப்பு கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில் குரூப்களில் ஆங்கில பாடப்பிரிவும் தற்காலிக மூடப்படுகிறது. ஏனென்றால், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் பல்கலை நிர்வாகம் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.
- Advertisement -