அதிகமாகக் கடன் வாங்கி பல இன்னல்களுக்கு ஆளானவர்களும் ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டக சனி என்று சனியின் வகை வகையான தோஷங்களில் பிடிபட்டுக்கொண்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் சனி தோஷக்காரர்களும் அவருடைய குருவாக விளங்கும் பைரவரை வணங்கினால் நிச்சயமாக உங்களுடைய துன்பங்கள் குறையும்.
நீங்கள் பைரவருக்குத் தயிர்ச் சாதத்தை நைவேத்யமாகச் செய்து செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் பல விதமான தோஷங்களிலிருந்து நீங்கி அதிர்ஷ்டமான யோகங்களைப் பெறலாம். பைரவருக்கு மிளகு முட்டை வைத்து தீபம் ஏற்றினால் தீராத எவ்வளவு கடன் இருந்தாலும் விரைவாகத் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.
அதுபோல் ஒரு முழு எலுமிச்சையை அவருடைய திருவடியில் வைக்கப்பட்டு பின்பு அதனை வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜையறையில் வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் வெளியேறி நல்ல சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கும். இதனால் வீட்டில் எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் எளிதாக நீங்கி ஒற்றுமை ஓங்கும்
- Advertisement -