இந்துப்புக்கு, சைந்தவம், பாறை உப்பு என்ற பெயர்களும் உள்ளன. இது, சற்று ஊதா நிறத்தில் இருக்கும். இந்த உப்பை நாம் அன்றாட உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடம்பில் மலக்கட்டைச் சரிசெய்யும், வயிற்றில் உருவாகும் வாயுப் பிரச்சனைகளையும் சரிசெய்யும். சிறுநீரைப் பெருக்கும்.
அதைப்போல், இந்துப்பு 20 கிராம், சீரகம் 10 கிராம், ஓமம் 25 கிராம், திப்பிலி 50 கிராம், சுக்கு 100 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து சூரணம் போலச் செய்து மோரில் கலந்து குடிப்பது நல்லது. மேலும், இது சுளுக்கு ஏற்படும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க இந்துப்பு பயன்படுத்தப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்ற உப்பை உணவில் சேர்ப்பதைவிட, இந்துப்பை மிகச் சிறிதளவு சேர்ப்பது நல்லது.
ஏனெனில், இதில் சோடியம் அளவு குறைவாக இருக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம் தடாலடியாக அதிகரிப்பது தடுக்கப்படும்.
- Advertisement -