குஜராத்தின் அமுல் நிறுவனம் தற்போது தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் பால் கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் நிறுவனத்தின் பால் உற்பத்தி கடுமையாகப் பாதிப்பு ஏற்படும். ஏனென்றால், அமுல் நிறுவனம் கிராமந்தோறும் கூட்டுறவு அமைப்பு, சுய உதவிக் குழு மூலம் பால் சேகரிப்பு நிலையம் அமைத்து, பாலில் அதிக லாபம் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்’ எனக் கூறியுள்ளது.
இதனால், வட மாவட்ட விவசாயிகள் அமுல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இதன் காரணமாக உள்ளூர் நிறுவனங்கள், அரசு கீழ் செயல்படும் பால் நிறுவனம் ஆகியோருக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, நாட்டில் பால் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் அமுல் நிறுவனத்தின் இந்நடவடிக்கை நுகர்வோர் மத்தியில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்தக் கோரி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் கடிதம் அனுப்பியுள்ளார்.
- Advertisement -