நேற்று (மே 24) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் லக்னோ அணிக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்று குவாலிஃபியர் 2ம் சுற்றில் குஜராத் அணியை நாளை (மே 26) அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்கிறது. மேலும், நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் தோல்வியுற்ற லக்னோ அணி இந்த நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில், திருவல்லிக்கேணி தொகுதியில் கிரிக்கெட் ஆர்வம் கொண்ட 25 திருநங்கையர், திருநம்பியர்கள், நேற்று நடைபெற்ற மும்பை, லக்னோ போட்டியை இலவசமாகக் காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு மக்கள் தங்களது பாராட்டத்தை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -