நாம் பொதுவாக திருநீற்றை எடுக்கும்போது கீழே சிந்தவிடக்கூடாது. அதைப்போல், ஆள்காட்டி விரலால் திருநீற்றைத் தொட்டுப் பூசக்கூடாது. மேலும், இந்த திருநீற்றை நெற்றி நிறையப் பூசவேண்டும். இந்த திருநீறு தருபவர் நிற்க, மற்றவர் உட்கார்ந்து வாங்குவது கூடாது. ஆடையின்றித் திருநீறு தரிக்கக்கூடாது. திருநீறு அணியும் போது சிரிப்பதும், பேசுவதும், நடப்பதும், கண்ணாடி பார்ப்பதும் கூடாது. திருநீற்றை ஒவ்வொரு தடவை வைக்கும் போதும் நமச்சிவாய என்ற ஐந்தெழுத்தை ஓத வேண்டும்.
மேலும், இந்த பெருவிரல், நடுவிரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களைக் கூட்டித் திருநீற்றை எடுக்கவும், கொடுக்கவும் வேண்டும். பெருவிரல் அகாரம், நடுவிரல் உகாரம், மோதிரவிரல் மகாரம் என்று பாவனை செய்து மூன்று விரல்களால் மும்மூர்த்தி ஆகும். முக்குணம், மூன்றுவகை ஆன்மா, மூன்று வேதம், மூவகைத்தி என்று அனுசந்தானம் செய்து தரிப்பது விசேஷம்.
- Advertisement -