தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 23ஆம் தேதியில் தொழில் முறை பயணமாகச் சிங்கப்பூர்சென்றுள்ளார். அங்குப் பல தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சில சிங்கப்பூர் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், அங்கு வாழும் தமிழ் மக்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். சில நிகழ்ச்சியிலும் பங்கேற்றினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன், நெஞ்சம் நெகிழ்ந்தேன். தமிழும் தமிழ்ப் பண்பாடும் காத்து வாழும் அவர்களின் அன்னை நிலமான தமிழ்நாட்டின் அன்போடு அவர்களிடம் உரையாற்றினேன். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் காக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை ஆழப் பதிந்தேன் என அங்கு வாழும் தமிழ் மக்களைச் சந்தித்த பின் முதலமைச்சர் நெகிழ்ச்சியாகக் கூறினார். பின்னர் இன்றுடன் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்த ஜப்பான் பயணம் செய்யவுள்ளார் எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -