நாம் உண்ணும் உணவின் சுவைகளை ஆறு வகைகளாக நமது முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். அவை இனிப்பு, கசப்பு, உவர்ப்பு புளிப்பு, துவர்ப்பு, எரிப்பு (காரம்) ஆகிய ஆறு சுவைகளையே ‘அறு சுவைகள்’ என்கிறோம். அப்படி நாம் உண்ணும் உணவில் இந்த ஆறு சுவைகளின் அளவு சரியான விகிதத்திலிருந்தால் மட்டுமே அந்த உணவு நமக்கு முழுமையான நிறைவான உணவாக அமையும்.
ஏனென்றால், நமது உடல் நலத்தைக் காப்பதில் இந்த சுவைகளுக்கு முக்கியமான பங்கு உள்ளது. இது குறித்தும் நமது முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விரிவாக ஆராய்ந்து எழுதி வைத்துள்ளனர். ஆக, நீங்கள் உண்ணும் உணவில் ஆறு சுவைகளும் சரியான விகிதத்தில் இருக்கும்படி பார்த்துக்கொண்டாலே பெரும்பாலான நோய்களும் உருவாகாமல் தடுத்துக் கொள்ள முடியும்.
- Advertisement -