பார்வதி ஒருமுறை ஈசனிடம் விளையாட்டாகக் கண்ணை மூடிவிட்டதால் இந்த உலகமே இருளாகிப் போனது. அப்போது அந்த இருளை போக்க அப்பன் ஈசன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். திறந்த நொடியில் நெற்றிக்கண்ணின் ஒளி இந்த பிரளயத்தையே பிறழச் செய்தது. ஏனென்றால், இந்த நெற்றிக்கண்ணால் பிரம்மனுடன் அணைத்து ஜீவராசிகளும் அழிந்து போனது. இவ்வுலகத்தை மீட்டுக் கொண்டு வர , தாய் பார்வதி இரவெல்லாம் விழித்திருந்து நான்கு வேளை பூஜை செய்தால் ஈசனிடம்.
அப்போது தான் ஈசனும் பார்வதிக்கு அவருக்கு வேண்டிய வரத்தைக் கொடுத்தார். அவ்வரத்தைப் பெற்றபின், தனக்குக் கொடுத்த அருளைப் போல் மாசி மாதம் பிரளயம் வந்த ராத்திரியை மகா சிவராத்திரியாக மக்கள் கொண்டாடவும், அவர்களில் இரவெல்லாம் விழித்திருந்து சிவனைப் பூஜிப்போரின் பாவம் போக்கவும், அவர்களுக்கு எல்லா வித நன்மையும் கொடுத்து அருள் புரிய வேண்டும் என அன்னையான தேவி பார்வதி வேண்டிக்கொண்டால்.
சிவ பெருமானும் “அப்படியே ஆகட்டும் ” எனக் கூறி அருள் புரிந்தார். இந்த இரவே சிவராத்திரி என வரலாறு ஆனது.
- Advertisement -