தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில், நேற்று (மே 24) இந்தியாவில் படிப்படியாகக் கோடை வெப்பம் குறையும் என்றும், அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர்.
அவை வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை ஆகிய 22 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -