இந்தியாவில் இயங்கி வரும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆகும். இதில் தற்போது வரை இந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வழங்கவில்லை. இதனால் இந்தியாவில் மொத்தம் 103.68 மில்லியன் மொபைல் சந்தாதாரர்களில் வெறும் 9.27% சதவீதத்தை மட்டுமே பிஎஸ்என்எல் தன்வசம் கொண்டுள்ளது.
இதனால் டிசிஎஸ் மற்றும் ஐடிஐ லிமிடெட் நிறுவனம் பிஎஸ்என்எல்-லுடன் இணைந்து, இன்னும் இரண்டு வாரங்களில் சுமார் 200 சைட்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. இது தற்போது வெறும் 3 மாதம் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு நாள் ஒன்றுக்கு 200 தளங்கள் 4ஜி சேவை அறிமுகமாக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தாண்டு டிசம்பர் மாத வாக்கில் 5ஜி சேவையும் இந்த பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யப்படும் கூறியுள்ளார்.
- Advertisement -