Wednesday, April 17, 2024 5:13 am

அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வருவோம் : லக்னோ அணி

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஐபிஎல் 2023ல் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிஃபியர் 2க்கு முன்னேறியது மும்பை அணி. இதனால் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் வெளியேறியது லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் அணி.
இந்நிலையில், இந்த தோல்வி குறித்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா அவர்கள், “உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி. அறிமுகமான இரண்டே ஆண்டுகளில், இரு முறை ப்ளேஆஃப்-க்கு சென்றது மகிழ்ச்சி. ஆனால், வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது போதாது. இந்த நடப்பு ஐபிஎல் -லில் செய்த தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்கிறோம். அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வருவோம்” என நம்பிக்கையாகக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்