டெல்லியில் வரும் சாவர்க்கர் பிறந்தநாளான மே28 ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறக்கவுள்ளார். ஆனால் மோடி நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புறக்கணித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை நடத்துகிறார் எனக் கூறி டெல்லி ஆம் ஆத்மீ கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி போன்ற பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இவ்விழாவைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இவ்விழாவில் குடியரசுத் தலைவர் முர்முவை புறக்கணித்துவிட்டு நடத்துவதால், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் இதுகுறித்து எனது ட்விட்டர் பக்கத்தில் சிங்காரித்து மனையில் குந்தவைத்து மூக்கறுக்கிற கதையாகவுள்ளது எனக் குறிப்பிட்டு விசிக சார்பில் கண்டிப்பதுடன் இந்த நிகழ்வைப் புறக்கணிக்கிறோம் என ட்வீட் செய்துள்ளார்.
- Advertisement -