டெல்லியில் வரும் மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பிரதமர் மோடியே திறந்து வைப்பதைக் கண்டித்தும், திறப்பு விழாவிற்குக் குடியரசுத் தலைவரை அழைக்காததைக் கண்டித்து ஆம் ஆத்மீ , திரிணமூல் கட்சி, விசிக கட்சி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, போன்ற பல எதிர்க்கட்சிகள் இவ்விழாவைப் புறக்கணித்துள்ளதாகச் சற்று நேரத்திற்கு முன் அடுத்தடுத்து அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், டெல்லியில் வரும் மே 28ம் தேதியன்று நடைபெறும் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை திமுக அரசு புறக்கணிப்பதாகச் சற்று முன் அறிவித்துள்ளது.
- Advertisement -