தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (மே 23) மாலை சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முன்னிட்டு பெரும் தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.மேலும், சிங்கப்பூர், ஜப்பான் உட்பட சில நாடுகளுக்குச் சென்று அங்குள்ள சில தொழில்களைத் தமிழ்நாட்டில் ஆரம்பிக்க அழைத்துள்ளார்.
அதன்படி, சிங்கப்பூரைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P என்ற இண்டர்நேஷனல் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் இடையே ரூ.312 கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும், சிங்கப்பூர், இந்தியா கூட்டாண்மை அலுவலகம் , தமிழ்நாடு சிப்காட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -