சென்னையில் உள்ள கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீஜீ அவர்கள் நேற்று (மே 23) வெளியான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவில் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அந்த மாணவிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வானது கூடுதல் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
அதைப்போல், இதில் தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயலுங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயர வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு பல இலவசப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்தி வெற்றிகண்டு நம் மாநிலத்திற்குப் பெருமை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
- Advertisement -