பொதுவாகக் கொப்பரைத் தேங்காயைச் செக்கில் ஆட்டி எடுப்பது அல்லது தேங்காய்ப் பாலெடுத்து காய்ச்சுவது என்ற 2 முறைகளில் எடுக்கும் தேங்காய் எண்ணெய்தான் சிறந்தது. மேலும், இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் உடலில் பூசுவதற்கும் சமையலுக்கும் உகந்தது அல்ல. அதேசமயம், இந்த தரமான தேங்காய் எண்ணெய் என்பது குளிர் காலத்தில் உறைய வைக்க
வேண்டும்.
மேலும், சமையலில் தாளிப்பதற்கு மட்டும் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒருநபர் ஒருநாளைக்கு 2 மேசைக்கரண்டி (30 மில்லி) தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். இந்த அளவு மட்டும் எடுத்தால் உடல் தசைகள் வலுவாகும், கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு உடலில் சேரும், சருமத்துக்குச் சிறந்த மாய்ச்சரைஸராக செயலாற்றும்.
இது வெயில் காலத்தில் தோலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும், வறண்ட சருமம் ஏற்படாது. காயங்களைக் குணப்படுத்தும் தன்மை இருப்பதால் உடலில் ஏற்படும் சிறிய காயங்கள், சிராய்ப்புகளில் பூசலாம்.முகத்தில் தேங்காய் எண்ணெய்யைத் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்தால் கண்களைச் சுற்றியுள்ள சுருங்கங்கள் மறைந்து, முகம் பொலிவாகும்.
- Advertisement -