இந்தியாவில் கடந்த மே 18 ஆம் தேதியில் ரூ .2000 நோட்டுகள் அனைத்தும் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்காக வங்கிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. அதைப்போல், நேற்று (மே 23) முதல் வங்கிகளில் பெறப்படும் ரூ .2000 நாளொன்றுக்கு ரூ.20,000 வரை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களிடம் இருந்து ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெறுவது குறித்த நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது, இதுவரை எந்த சிக்கல்களும் ஏற்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
- Advertisement -