டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்குக் குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அழைப்பு விடுக்காததைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளனர். மேலும், இந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் கிடைத்தவுடன் இது தொடர்பாக இன்று (மே 24) கூட்டறிக்கை வெளியிட எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -