- Advertisement -
அரசு மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் சராசரியாக ஒரு நபர் வீதம் 5 கிலோ எடை வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் என தமிழக போக்குவரத்துத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.
ஏனென்றால், அரசு மாநகர பேருந்துகளில் பயணிகள் 20 கிலோ வரை எடையுள்ள பொருட்களுக்கு சுமை கட்டணமாக ரூ.10 அல்லது ஒரு பயணிக்கான கட்டணம் வசூலிக்க வேண்டும். அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை ஏற்ற அனுமதிக்க கூடாது என இருந்து வந்த நிலையில், தற்போது 5 கிலோ எடை வரை கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -