தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களின் போது ஆடல் பாடல், கரகாட்டம் உள்ளிட்ட பல கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனுவை மதுரை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. இவ்வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் , இந்த நிகழ்ச்சிகளை நடத்த 7 நாட்களுக்குள் பரிசீலனை செய்து காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும், அல்லது அனுமதி இல்லை என்ற எடுக்கப்பட்ட முடிவைத் தெரிவிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு
அதேசமயம், இந்த 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்க வில்லை என்றால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும். ஆகவே, இது தொடர்பாக டிஜிபி அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
- Advertisement -