இந்தி இயக்குநர் சுதீப்சென் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் வேறுவேறு மதத்து கேரளா பெண்கள் கடத்தப்பட்டு அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய பின் பயங்கரவாத இயக்கத்தில் இணைவது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். ஆகவே, இத்திரைப்படத்தை பல மாநிலங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் இப்படத்தை தடை செய்ய வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், இது குறித்து விசாரித்த நீதிபதி தணிக்கை குழுவால் சான்றிதழ் கொடுத்த இப்படத்தை தடை செய்ய முடியாது என கூறி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு சில மாநிலங்கள் தடை விதித்திருப்பது, அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதற்கு இணையான செயல் என்றும், அப்படி அரசு அமைப்புகளில் ஒன்றான திரைப்பட தணிக்கை துறை ஒரு படத்துக்கு அனுமதியளித்த பிறகு, அந்தப் படத்துக்கு தடை விதிப்பது சரியில்லை என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடும் விமர்சனம் செய்துள்ளார்.