நீங்கள் முந்திரிப் பருப்புடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து உண்டால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அதைப்போல், பசும்பாலுடன் பேரீச்ச பழம் விதையை நீக்கி சேர்த்து வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் குணமாகும். அத்துடன் ஜலதோஷம், இருமல் குணமடையும்.
.
மேலும், இந்த பேரீச்சம் பழத்தைத் தேனில் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள். பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிக தேவைப் படுகிறது. அதுவும் இந்த மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பலகீனத்தை ஈடுகட்டவும், மாத விலக்கை ஒழுங்குப்படுத்தவும் இந்த பேரீச்சம்பழம் மருந்தாகிறது.
அதன்படி, சர்க்கரை நோயுடையவர்க்கு எலும்புகள் பலம் குறைந்து வரும். இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
- Advertisement -