Thursday, March 28, 2024 5:23 pm

அந்த ஒரு காரணத்தினால் நோ சொன்ன அஜித் ! வெங்கட் பிரபுவை விஜய் ஓகே பண்ண இதான் காரணமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தளபதி 68 மே 21 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விஜய்யை சந்தித்து ஒரு ஒன் லைனர் பாடலை கூறியிருந்தார். தற்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மற்ற நடிகர்கள் யார் என்பது குறித்து பல கதைகள் உலவுகின்றன.

சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், நடிப்பு என்று வரும்போது சிறந்த கேரியர் கிராஃப் கொண்ட எஸ்ஜே சூர்யாவைத் தவிர வேறு யாருமில்லை. எஸ்.ஜே.சூர்யாவுக்கு சமீபகாலமாக தேவை அதிகரித்து, இப்போது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தனா டபுள் எக்ஸ் படத்தில் பிஸியாக இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா விஜய்யுடன் இயக்குனராகவும் நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் இடையே இருக்கும் தொழில் முனை போட்டிகள் அவரது ரசிகர்கள் மூலமாகவே நாம் நாள்தோறும் பார்த்துக் கொண்டு வருகிறோம். சமூக ஊடகங்களில் அஜித் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சமீப காலமாக இருவருக்கும் இடையே கடும் போட்டிகள் நிலவி வருகின்றது. அப்படி இருக்கையில் ஒரே ஸ்கிரீனில் எப்போது இருவரையும் ஒன்றாக பார்க்கப் போகிறோம் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் .அதுவும் அந்த ஒரு கேள்வியை இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் மட்டுமே கேட்டு வந்தனர்.

அதற்குக் காரணம் மங்காத்தா படப்பிடிப்பு சமயத்தில் வெங்கட் பிரபு அஜித் விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதன் மூலமாகவே. இருவரும் சம்மதித்தால் ஒரே ஸ்கிரீனில் காட்டத் தயார் என வெங்கட் பிரபு அந்த நேரத்தில் குறிப்பிட்டிருந்தார். அப்போது ஆரம்பித்த இந்த கேள்வி இப்போது வரை வெங்கட் பிரபுவிடம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இந்த நிலையில் விஜயின் அடுத்த படமான தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்திருக்கின்றன. அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் வலைப்பேச்சு பேச்சாளருமான அந்தணன் வெங்கட் பிரபுவை விஜய் எப்படி ஓகே செய்தார் என்பதை தனது பேட்டியின் மூலம் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது விஜய், நடிப்பில் ஒரு பக்கம் ஆர்வம் காட்டி வந்தாலும் அரசியலிலும் தனது ஈடுபாட்டை அவ்வப்போது காட்டி வருகிறார் .இப்போது இருக்கும் சூழ்நிலையில் இளம் இயக்குனர்கள் மத்தியில் வெங்கட் பிரபுவால் மட்டுமே அரசியல் சார்ந்த படங்களை கொடுக்க முடியும் என மாநாடு படத்தின் மூலம் விஜய் நினைத்திருக்கலாம். அதனாலயே வெங்கட் பிரபுவை ஓகே செய்திருப்பார் என அந்தனன் கூறியிருக்கிறார்.

ஏனெனில் மாநாடு படம் ஒரு அரசியல் சார்ந்த படமாக அமைந்ததால் அந்த மொத்த கிரெடிட்டும் வெங்கட் பிரபுவை மட்டுமே சேரும். அதனாலேயே தளபதி 68 படம் ஒரு அரசியல் பின்னணியில் அமைந்த படமாக இருக்கலாம் என கூறுகிறார். இது மட்டும் இல்லாமல் வெங்கட் பிரபு மீது அஜித் ஒரு சிறிய மன வருத்தத்திலும் இருக்கிறார் என்றும் அந்த அண்ணன் கூறினார் .ஏனெனில் சில தினங்களுக்கு முன்பு அஜித்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெங்கட் பிரபு இணையத்தில் பதிவிட்டதன் காரணமாகவே அஜித் அவர் மீது கோபத்தில் இருக்கிறார் என்று அந்தனன் கூறினார். அந்த புகைப்படம் வைரலானதும் ஒருவேளை மங்காத்தா 2 படமாக இருக்கலாமோ என ரசிகர்களும் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.அதனாலேயே இருவருக்கும் இடையே ஒரு சிறு விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அந்தணன் கூறினார்.

பிகில் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், தளபதி விஜய்யுடன் 2வது முறையாக அவரது 68வது படத்திற்காக #Thalapathy68 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது AGS இன் 25 வது முயற்சி மற்றும் இதுவரை தயாரிப்பு நிறுவனத்தின் மிகப்பெரிய படமாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்