நாம் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கிய பின் வாங்கும் விபூதியைக் கண்ணாடி பார்த்துக்கொண்டே பூசக்கூடாது என்கின்றனர். அதைப்போல், விநாயகர் கோயிலில் ஒருமுறை வலம் வந்தால் மட்டுமே போதுமானது . ஆனால், நீங்கள் சிவன் கோயிலுக்குச் சென்றால் மூன்று முறை வலம் வரவேண்டும். அதேசமயம், சிவன் கோயிலுக்குச் சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது.
மேலும், நீங்கள் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துக்கொள்ளக்கூடாது, தன்னையே சுற்றிக்கொண்டு சாமி கும்பிடக்கூடாது, துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்துச்செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
- Advertisement -