இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் லீக் தொடரில் கடைசி போட்டியை டெல்லியில் உள்ள அருண் மைதானத்தில் எதிர்கொண்ட சென்னை அணி 77 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு முதலாகச் சென்ற குஜராத் அணிக்கு அடுத்து, 2வது அணியாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப்-க்கு தகுதி பெற்றது.
தற்போது முதல் 2 இடத்தை பெற்றுள்ள குஜராத், சென்னை அணி நாளை (மே 23) சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இதுவரை குஜராத் அணி ஒரு போட்டி கூட விளையாடியதில்லை. இந்த ஹோம் கிரவுண்ட் சூழல், சென்னை அணிக்குச் சாதகமாக அமையுமா? அல்லது, இதுவரை சி.எஸ்.கே அணியிடம் தோற்றதே இல்லை என்ற சாதனையைக் குஜராத் அணி தக்க வைக்குமா ? என்பதைப் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவல் கொண்டு காத்திருப்பதாகத் தகவல் வந்துள்ளது.