கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுக் கடந்த 20 ஆம் தேதி பெங்களூரில் நடந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதற்காகத் தமிழக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி,காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வருபவர்களுக்குப் புத்தகம் வழங்குவார். இதைத் தொடர்ந்து, தற்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், தன்னை சந்திக்க வருபவர்களுக்குப் பூங்கொத்து, சால்வைகள் அளிப்பதைத் தவிர்த்துவிட்டு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர் “என்மீது அன்பும் மரியாதையும் செலுத்த நினைப்பவர்கள், புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குங்கள்” என சித்தராமையா கட்சிக்கு வலியுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
- Advertisement -