இந்தியாவில் கடந்த மே 19ஆம் தேதியில் ரூ .2000 நோட்டைத் திரும்பப் பெறுவதாக இந்திய வங்கி அறிவித்திருந்தது. இதுகுறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், சாமானிய மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு கிடையாது. கடந்த 2016ல் அதை அறிமுகம் செய்தபோதே பொதுமக்கள் அதை நிராகரித்துவிட்டனர். அதைப் பயன்படுத்தி வந்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், இந்த கருப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க மட்டுமே ரூ 2000 நோட்டு உதவியுள்ளது என்றார்
அதைப்போல் , இந்த 2000 நோட்டை மாற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என வங்கிகள் அறிவித்துள்ளன. இது கருப்புப் பணம் வைத்திருப்பவர்களைச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் வகையில் உள்ளது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2000 நோட்டு என்ற முட்டாள்தனமான முடிவைத் திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாக ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
- Advertisement -