இந்தியாவில் கடந்த மே 19ஆம் தேதியில், இனி ரூ.2000 புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுகிறோம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதையடுத்து, மக்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள மக்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரூ 2000 நோட்டு மாற்ற நாளொன்றுக்கு ஒரு நபர் விதம் ரூ.20000 மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், ரூ.2000 நோட்டை நேரடியாக டெபொசிட் எந்த கட்டுப்பாடும் இல்லை என வங்கி தெரிவித்திருந்தது. இதையடுத்து வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் பல வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது கோடைக் காலம் இருப்பதால் 2000 நோட்டுகளை மாற்ற வரும் மக்களுக்கு நிழலான இடம், குடிநீர் வசதி போன்றவற்றை அளிக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியது
- Advertisement -