இந்தியாவில் அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளும் திரும்பப் பெறப்படும் என்றும், அது நாளை (மே 23) முதல் அனைத்து வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்காக அனைத்து வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
இந்நிலையில், ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள், ”2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றப் பொதுமக்கள் அவசரப்பட வேண்டாம் என்றும், இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாத இறுதிவரை புழக்கத்தில் இருக்கும். மக்கள் இந்த ரூபாய் நோட்டை மாற்ற 4 மாதம் அவகாசம் உள்ளது என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ரூ.2000 நோட்டை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். பணி நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே இந்த 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது. அனைத்து 2000 நோட்டுகளும் மீண்டும் எங்களிடம் வந்துவிடும் என நம்புகிறோம் என்று கூறினார்.