நாம் ஆரஞ்சு ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை பிரிட்டிஷ் ஊட்டச்சத்து இதழில் வெளியாகியது. அதில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் என்னவென்றால், பொதுவாக ஆரஞ்சு ஜூஸ் அடிக்கடி அருந்துபவர்களுக்கு மூளையில் ரத்தம் உறையும் வாய்ப்பு 24% குறையலாம். அதைப்போல், இந்த ஆரஞ்சு ஜூஸ் தொடர்ந்து அருந்துபவர்களின் ரத்தக்குழாய்கள் சேதமடைவதற்கான வாய்ப்பு 12% குறைகிறது என ஆய்வுக்கட்டுரையில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், இந்த ஆரஞ்சு ஜூஸ் அருந்தினால் இதயம் சார்ந்த பிரச்சனைகல் வரும் வாய்ப்பு குறையும். ஆனால், நீங்கள் கடைகளில் விற்கப்படும் ஆரஞ்சு ஜூஸில் வைட் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படலாம். அதனால் ஆரஞ்சுப் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது வீட்டில் தயாரித்து அருந்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.