தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 22) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது ஏற்படும் மரணங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்திகரிக்கும்போது, உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது என்றார்.
மேலும், இந்த பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. எனவே நவீன இயந்திரம் மூலமாக இனி கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் திட்டத்தை வரும் 4 மாதங்களில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- Advertisement -