தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சராகக் கலைஞர் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடுவது குறித்து இன்று (மே 22) அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனை நடத்தினார். அதில் கலைஞரின் சாதனைகளான இஸ்லாமியருக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கியது, நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்ட பல திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்தாக பட்டியலிட்டுப் பேசிய அவர், அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் விதமாக இந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, இந்த விழா கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடும் விழாவாக இருக்க வேண்டும் என்றும், இதற்காக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும். இதுகுறித்து விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.