தமிழ் திரையுலகில் முத்து, அண்ணாமலை உட்படப் பல படங்களில் நடித்து வந்த நடிகர் சரத்பாபு வயது மூப்பு காரணமாக சில உடல் நலப் பிரச்சனைகளைச் சந்தித்து வந்தார். இதனால் இவருக்கு ஹைதராபாத் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று (மே 22) பிற்பகல் சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்தார். இந்நிலையில், இவரது மறைவுக்குத் திரை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில், ”சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இவர் காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்றுச் சிறப்புச் செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி” எனச் சோகமா ட்வீட் செய்துள்ளார்.
- Advertisement -