ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று நமது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு பிரார்த்திக்க வேண்டும். பின்னர், வீட்டிற்கு வந்து பூஜையறையில் நமது குலதெய்வத்தை மனதார நினைத்து வேண்டிக் கொண்டு அரச மர இலைகளை மூன்று மூன்றாகப் பிரித்து அதன்மீது உப்பை வைத்த பின்னர் உதிரிப் பூக்களை அதில் போட்டுக்கொள்ளுங்கள். அப்படியே அதன் மீது அகல் விளக்குகளை வைத்து 9 அகல் விளக்குகள் வைத்து வழிபடுங்கள்.
இதனை 9 அமாவாசைகள் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய பாவ வினைகளிலிருந்து நமக்கு மோட்சம் கிட்டும். அதைப்போல், நாம் கோவிலுக்குச் செல்லும் போது சண்டிகேசுவரரைக் கண்டிப்பாக வணங்க வேண்டும். ஏனென்றால் அவர் தான் நம்முடைய முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டவர். ஆகவே, நாம் அவரை வேண்டிக் கொண்டு அன்னதானம் செய்யதால் உங்களது முன் ஜென்ம பாவம் அனைத்தும் விலகும்.
- Advertisement -