இந்தியாவில் நேற்று (மே 19) ரூ.2000 நோட்டு புழக்கத்திலிருந்து மாற்றப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஏனென்றால், கடந்த 2018 ஆண்டு முதலே இந்த 2000 ரூபாய்க்கான நோட்டை அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, பின் படிப்படியாகப் பணப் பரிவர்த்தனையில் இந்த 2000 ரூபாய் நோட்டு குறைக்கப்பட்டது. தற்போது, இந்த 2000 ரூபாய் முற்றிலும் புழுக்கப்படுவதை நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி இம்முடிவு எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த 200 ரூபாய் நோட்டு மாற்றப்படுவது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ” ரூ 2000 நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல. இங்குக் கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். பணமதிப்பிழப்பின்போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்கமுடியாதவை. அந்த கஷ்டத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கக் கூடாது” எனத் தனது காட்டத்தைக் கூறியுள்ளார்.
- Advertisement -