இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மீ கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும், அதில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்ற வழக்கைத் தொடர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும், நியமிக்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் உள்ளதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தற்போது மத்திய அரசு இந்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில், ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் இனி நிர்வாக விவகாரங்களில் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறப்படுகிறது.
- Advertisement -