Friday, March 29, 2024 9:32 pm

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் : இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக புதிய 500 நோட்டுகள், 2000 நோட்டுகள், 200 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு பின் புழக்கத்தில் வந்தது. இந்நிலையில், நேற்று (மே 19) இரவு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தது. மேலும்,  மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் மே 23-ம்தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இதன்காரணமாக, வங்கிகளில் கூட்டம் கூடுவதைத் தடுக்க ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மட்டுமே தனிநபர் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக அனைத்து வங்கிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்திலிருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில், இனி வங்கிகள் அந்த நோட்டுகளைப் பொதுமக்களுக்கு விநியோகிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்