இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக புதிய 500 நோட்டுகள், 2000 நோட்டுகள், 200 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு பின் புழக்கத்தில் வந்தது. இந்நிலையில், நேற்று (மே 19) இரவு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தது. மேலும், மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் மே 23-ம்தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இதன்காரணமாக, வங்கிகளில் கூட்டம் கூடுவதைத் தடுக்க ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மட்டுமே தனிநபர் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக அனைத்து வங்கிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்திலிருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில், இனி வங்கிகள் அந்த நோட்டுகளைப் பொதுமக்களுக்கு விநியோகிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
- Advertisement -