இந்தியாவில் நேற்று (மே 19) 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. பின்னர் மக்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வரும் மே 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றனர். மேலும், அப்படி வங்கிகளில் மாற்றும் போது ஒரு நபருக்கு ஒரு நாளில் ரூ.20,000 மேல் 2000 நோட்டுகள் மாற்றக்கூடாது எனக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இந்நிலையில், இந்த 2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்துப் பிற நோட்டுகளை மாற்ற மட்டுமே கட்டுப்பாடு இருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 10 நோட்டுகள் வீதம் 20,000-க்கு மட்டுமே 2000 நோட்டுகளைக் கொடுத்துப் பிற நோட்டுகள் பெறலாம் என ஆர்.பி.ஐ தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த 2000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் வைப்புத்தொகை செய்யலாம் எனக் கூறியுள்ளனர்.
- Advertisement -