பொதுவாக நாம் விளக்கு ஏற்றும் போது எந்த எண்ணெய் என்பதை மட்டும் தான் கவனிக்கிறோம். ஆனால், விளக்கு ஏற்ற பயன்படும் திரி வகையிலும் பல நன்மைகள் உண்டு. அவை இலவம் பஞ்சுத்திரி – இது சுகம் தரும், தாமரைத்தண்டு திரி – முன்வினை நீக்கும், செல்வம் சேரும், திருமகள் அருள் உண்டாகும். வாழைத்தண்டு திரி – மக்கட்பேறு , மன அமைதி, குடும்ப அமைதி ஆகியவை உண்டாகும். அதைபோல், தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும். வெள்ளெருக்கு திரி – இது செய்வினையை நீக்கும், ஆயுள் நீடிக்கும், குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும்.
அதேமாதிரி, பருத்தி பஞ்சுத்திரி – தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும், வம்சம் விருத்தியாகும். வெள்ளைத்துணி திரி – அனைத்து நலங்களும் உண்டாகும், சிவப்பு துணி திரி – திருமணத்தடை நீக்கும். மக்கட் பேறு உண்டாகும். மஞ்சள் துணி திரி – எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். அம்பிகையின் அருள் உண்டாகும், வியாதிகள் நீங்கும், செய்வினை நீங்கும், எதிரிகள் பயம் நீங்கும், தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும், மங்களம் உண்டாகும். பட்டுத்துணி திரி – எல்லா சுபங்களும் உண்டாகும். இது போல பல நன்மைகள் இந்த திரி மூலம் கிடைக்கப் பெரும்.