கர்நாடகவில் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இன்று பிற்பகல் பெங்களூர் மைதானத்தில் பதவியேற்று கொண்டனர். பின்னர் கர்நாடக தலைமை செயலகத்திற்கு சென்ற பின் முதல்வர் சித்தராமையா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அதில் ”மோடி அரசால் கர்நாடக அரசு பெரும் நிதியிழப்பை சந்தித்துள்ளது என்றும், ரூ. 1 லட்சம் கோடி வர வேண்டிய இடத்தில் வெறும் ரூ. 50 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்படுகிறது” என்றார். மேலும், அவர் ரூ. 5495 கோடியை நமக்கு வழங்க வேண்டும் என 15வது நிதிக்குழு கூறியுள்ளது. ஆனால், அந்த நிதியை முந்தைய பாஜக அரசு வாங்கவே இல்லை என பேட்டியளித்துள்ளார்.
அதைபோல், ரூ .4 லட்சம் கோடி வரி செலுத்திய கர்நாடக மாநிலத்திற்கு கிடைத்தது வெறும் ரூ.50,000 கோடிதான் கிடைத்துள்ளது. இதை வைத்து காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என பாஜக பொய்யான பரப்புரை செய்துவருகின்றனர். எங்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற ரூ. 50,000 கோடி போதுமானது என கூறியுள்ளார்.