ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (மே 19) பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின. இப்போட்டி நடந்த தர்மசாலாவில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது. இதையடுத்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஜாஸ் பட்லர் எந்த ரன்னும் எடுக்காமல் டக் அவுட்டானார். ஆகவே, இந்த நடப்பு ஐபிஎல் சீசனில் 5வது முறையாக டக் அவுட்டானார் என்ற மோசமான பெருமையைப் பெற்றுள்ளார் ஜாஸ் பட்லர்.
- Advertisement -