தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனாலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பம் சலனம் காரணமாக மழை பெய்வதால், அப்பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்து வருகிறது..
இந்நிலையில், தமிழகத்தின் இன்று (மே 20) 12 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தகவல் அறிவித்துள்ளது. அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -